இலக்கை நோக்கி தான் எங்கள் இன்பப் பயணம்

Ilakkai Nokki Thaan Engal Inba Payanam

அல்லது பெரிய படைப்பாளியாக வராமுடியாவிட்டாலும் பிடித்த துறையில் லைட்மேன் ஆகவாது தன் பணியை திடபடுத்தி கொண்டு பிழைத்து கொள்வான். அவனை பொறுத்தவரை பிடித்த துறை சினிமா அதில் இருப்பதே அவனுக்கு ஆனந்தம் என்பதால், கொஞ்சம் தாமதமானாலும் உரிய நேரத்தில் அவன் ஆற்றல் வெளிபட்டு பெரிய ஆளாக வருவது நிச்சயம். ஆனால் இலக்கில்லாமல் எங்கேயும் நீண்ட பயணத்தை தொடரவும் முடியாது.

அப்படி இலக்கே இல்லாமல் சாஃப்ட்வேர் சாக்கடைக்குள் விழுந்தவன் தான் நான். என் பெயர் குமார். அப்பா அலுவலகத்திலும், அம்மா அக்கம்பக்கத்து வீடுகளிலும் கேட்டு பழகிய பீலா கதைகளை கேட்டு என்னிடம்

“சாஃப்ட்வேர் தான் பியூச்சர் டா“ என்று கூறி என் பியூச்சருக்கு வேட்டு வைத்தனர். சின்ன வயதில் கவிதை எழுத ஆர்வம் கொண்டிருப்பதை அறிந்த அப்பா ஒரு நாள் என் தோளில் கைபோட்டபடி

“நல்ல எழுதுறே. நானும் படிச்சு பாத்தேன். எல்லோருக்கு எழுத வராது. ஆனால் எழுத்து சோறு போடாது. உதாரணத்துக்கு எழுத்தாளர் சுஜாதா எடுத்துக்கோ அவர் கடைசி வரைக்கும் பெல் கம்பெனியில வேலை பாத்துட்டு எழுத்தை பார்ட்டைம்மா வச்சுகிட்டார். அது போல உனக்கு நிரந்தர வருமானத்துக்கு ஒரு வேலைய தேடிக்கோ அதுல செட்டில் ஆகிவிட்டு அப்புறம் உன்னோட பார்ட்டைமா எழுத்த வச்சுக்கோ. பின்னாடி ஒரு வேலை நீ பெரிய எழுத்தாளனா ஆகிட்டா அப்போ உள்ள சூழ்நிலைக்கேற்ப உன் வேலைய விட்டுக்கோ“

என்று தோழனைப் போல் ஒரு பாலபாடத்தை எடுத்தார். மற்ற பெற்றோர்களை போல் என் திறமையை மிதிக்காமல் மதித்து அவ்வாறு கூறியதால் ஏற்று கொண்டு சாஃப்ட்வேர் சாக்கடைக்குள் நுழைந்தேன்.

அங்க வந்தவள் தான் சந்தியா. என்னோட டீம் லீடர். கோடிங்னாலே அலர்ஜி எனக்கு என்பதை புரிந்து கொண்டு பொறுமையாக பக்குவமாக என்னை ஹேண்டில் செய்தாள். அவளோட அப்ரோச் புடித்து போக மெதுவாக சொல்லப்போனால் அவளுக்காகவே ரிஸ்க் எடுத்து பல்வேறு வகையில் முயன்று கோடிங் கிங் ஆனேன். என் வளர்ச்சியில் அவளுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு என்றாலும் அவள் பரிவும் பாசமும் என்னை கவர, அவளை எனது ஆதர்சமாக கருத ஆரம்பித்தேன். வீக் என்ட் விடுமுறைகளில் அவள் வீட்டுக்கு அழைப்பாள். அவள் வீட்டுக்கு சென்று அவளது பெற்றோர்களோடு பழகி குடும்ப நண்பனாகவே மாறிவிட்டேன். ஆனால் அந்த குரு சிஷ்ய உறவு பாதிக்காத வகையில் கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயின்டேன் செய்து வந்தேன்.

இது அவளுக்கு புரிந்ததோ என்னவோ ஒரு நாள் வீக்என்டில் என்னை ஈஸிஆர் ரோட்டில் ஒரு லாங் டிரைவ் கூட்டி சென்று மனம் விட்டு பேசினாள். அவள் முதலிலேயே டிஸ்டர்ப்ட் ஆக இருந்த்ததால் அவள் காரை நான் தான் டிரைவ் பண்ணினேன்.

“என்னடா குமார் நான் ஏதாவது மிஸ்பிஹேவ் பண்றேனா?  கொஞ்ச நாளா நீ என்னை விட்டு விலகி போற மாதிரி தோணுது டா“

“அய்யோ சந்தியா ஏன் அப்படி நினைக்குறீங்க. அப்படி எதுவும் டிஃபரன்டா நான் பிஹேவ் பண்ணலியே. டே ஒன்ல எப்படியோ அப்படி தானே இப்பவும்… “

“அதான்டா உன்கிட்டே புடிக்கல. டே ஒன்ல இருந்த மாதிரியா இப்பவும் இருக்கோம். முதல்ல போங்க வாங்கனு சொல்றத விடு. அதுவே எனக்கு இரிடேடிங்கா இருக்கு டா“

“சோ சாரி. நான் உங்கள் இப்பவும் ஒரு கோலீக், சீனியர், பிரெண்ட் இதெல்லாம் தாண்டி தான் பாக்குறேன்“

“டே நான் என்ன அன்னை தெரசாவா. நீ டெய்லி என்னை நினைச்சு பிரே பண்றதுக்கு. உனக்கு எப்படி சொல்றதுன்னே புரியல டா“

“உன் இடத்துல இந்நேரம் வேற எவனாவது இருந்தா இந்நேரம் என்னை போடு போடுனு போட்டுட்டு போயிருப்பான்..நீ தான் என்னோமோ ஏலியன் மாதிரி என்ன பாக்குறே“

சந்தியா சொல்வது உண்மை தான் அவள் போல் ஒரு தேவதை தேடி வந்தால் தேன்சிந்துதே வானம் என்று தினந்தோறும் பாட ஆரம்பித்துவிடுவான். நான் உள்ளுக்குள் பெருமைபட்டு கொண்டாலும், முதல்முறையாக தன் உள்ள குமுறலை சந்தியா வெளிப்படுத்தி அதை புரிந்து கொண்டாலும் அவளின் தேவை தெளிவாக எனக்கு தெரிந்தாலும், அப்போதைக்கு வெள்ளந்தியாக வேஷம் போடுவதை தவிர வேற வழிதெரியவில்லை.

“நீங்க சாரி நீ சொல்றது புரியல சந்தியா. எப்படி என்ன மாத்திக்கணும் தெரியல. இன்னைக்கு நான் ஐடில இந்த பொசிஷனுக்கு இருக்கிறதுக்கு நீ தான் காரணம். ஸோ ஐ அம் ரெடி ஃபார் யுவர் டிமான்ட்“

“சீ போடா அதையே எவ்ளோ வருஷம் சொல்லுவே. உன்னோட முயற்சி, உன்னோட திறமையும் அடங்கிருக்கு. நீ பிடிக்காம இந்த  துறைக்கு வந்ததால அப்படி தோணுது. பட் யு டிஸர்வ்ட் ஃபார் வாட் யு ஆர் நவ்“

என்று சொல்லிவிட்டு தொடர்ந்த சந்தியா

“சரி டா நான் நேரடியாவே விஷயத்துக்கு வர்றேன். உனக்கு தெரியும் என் வீட்ல என் மேரேஜ் பத்தி அடிக்கடி பிரஷர் தர்றாங்க. நான் மாட்டேனு சொல்லலை ஆனா என்னோட டிமாண்டை எந்த மாப்பிள்ளை வீட்லயும் மதிக்கல. அவனுங்கள கட்டிகிட்டு அவங்க அப்பா அம்மாவை மட்டும் நான் காலம் பூரா கவனிச்சிக்கணும். ஆனா நான் என்னோட பேரன்ட்ஸ்க்கு ஒரே பொண்ணு மேரேஜ்க்கு அப்புறம் அவங்கள கவனிச்சிக்க கூடாது. இதை நான் சொன்னப்போ மாப்பிள்ளை வீட்டுகாரங்க விநோதமா பாக்குறாங்க. சில பேர் அப்போட வீட்டோட  மாப்பிள்ளை கிடைப்பான் அவனை கட்டிக்கோ மானு சொல்லிட்டு போயிட்டாங்க. என்னோட டிமாண்ட் தப்பா டா. என்னை வளர்த்து படிக்க வச்சு ஆளாக்கின் பேரண்ட்ஸுக்கு நான் கடைசி காலத்துல அவங்க கூட இருந்து அத ரீபே பண்றது தானே நியாயம். பெண்ணா பிறந்தததுனால எனக்கு அந்த கடமை கிடையாதா? என்னோட ஆட்டிடியூட்க்கு லவ் லாம் செட்டாகாது. அவனையும் பல மாசம், வருஷம் லவ் பண்ணி மேரேஜ் டைம்ல என்னோட டிமாண்டை மறுத்துட்டானா அவ்ளோ வருஷம் லவ்வும் வேஸ்டு“

சந்தியாவின் பொறுப்புணர்வையும், நேர்மையையும் புதுசாக பார்த்தேன். வருங்காலத்துல கல்யாணம் பண்ணா கூட “கடவுளே எனக்கு ஒரு பொம்பளை புள்ளை மட்டும் கொடு போதும்“ என்று கடவுளிடம் வேண்டி கொண்டேன். ராஜ்யத்துக்கு ஆண் வாரிசுகளை தேடி ராப்பிச்சை போல் தெருவில் அழையும் பெற்றோர்களுக்கு சந்தியா போல் ஒரு பெண் இருந்தாலே போதும் நாட்டில் பல முதியோர் இல்லங்கள் காணாமல் போய்விடும். பெற்றவர்களையே பாதுகாக்கும் பெண் மாமானார் மாமியாரை மட்டும் தவிக்கவா விடப்போகிறாள். கேட்கவே சந்தோஷமாக இருந்தது. இப்படி தான் அனைத்து பெண் பிள்ளைகளும் இன்று இருக்கிறார்கள் என்று சொல்ல மாட்டேன். காதல் கருமாந்திரத்தில் இன்பத்தை மட்டுமே உணர்ந்து பல ஆண்களோடு ஓடுகாலியாகவும், சில பெண்களே ஆண்களை இழுத்து கொண்டு ஓடும் சமூகத்தில் தான் நாமும் வாழ்கிறோம் என்பதோ மறுக்கவில்லை. ஆனால் அதற்காக சந்தியா தன் இல்லற வாழ்வை தியாகம் செய்யவேண்டுமா?

ஆனால் சந்தியா மனதில் என்ன தான் இருக்கிறது என்பதை அறிய ஆவலாக அவள் பேசுவதை மட்டும் கருத்தோடு கவனிக்க ஆரம்பித்தேன்.

“என்னை புரிஞ்சுகிட்ட ஒரு மனசை தான் தேடுறேன் டா. அந்த ஜீவனோட மடியில் அன்பால நிறைஞ்சு அணைச்சுகிட்டு அந்த சுகத்தை டெய்லி அனுபவிச்சிட்டு பொறுப்போட இந்த வாழ்க்கைய வாழ்ந்திட்டு போகணும்” என்று ஆதங்கத்தோடு சொல்லி ஏக்கத்தோடு என்னை பார்த்தாள்.

“ரியலி புரவுட் ஆஃப் யூ சந்தியா. உன்னை கட்டிக்கிறவன் தான் லக்கி. கண்டிப்பா என்னோட பொஸிஷன்ல நான் உனக்கு லவ் பிரபோஸ் பண்ண முடியாது. அந்த துணிச்சலும் எனக்கு இல்ல. இந்த நாளுக்காக தான் வெயிட் பண்ணேன். டுடே ஐயம் ஹாப்பி“ என்று சிரித்தபடியே டிரைவ் பண்ணும் போது சந்தியா என்னை வினோதமாக முறைத்து

“டே காரை ஓரமா நிறுத்துடா ராஸ்கல் ஏண்டா உங்க ஆம்பளை ஈகோவுக்கு அளவே இல்லையா. நாங்க அடக்க ஒடுக்கமாவும் இருக்கணும் தேவைப்பட்டா நாங்களே லவ் பிரபோஸ் பண்ணி….வாயில் வந்திடபோகுது..இவ்ளோ நாள் என்னை டெய்லி கொன்னதுக்கு இன்னைக்கு உன்னை முழுசா கொல்றேன்டா.இனிமே நீ எங்கிட்டே எஸ்கேப் ஆகவே முடியாது“

அன்று காரிலேயே எங்களது முதல் இரவு முடிந்தது. இருவருமே அடக்கி வைத்திருந்த ஆசையெல்லாம் காரிலேயே நான் இயங்கி அவள் கிறங்க, அவள் இயங்கி நான் கிறங்க சந்தியாவின் தேனடையை சுவைத்து என் தேன் அமுதத்தை தங்குதடையின்றி அவள் தடாகத்தில் பொழிந்து புத்துயிர் பெற்றேன். புதிய முடிவோடு வாழ்க்கை அத்தியாத்தை தொடங்க அவள் இப்போது காரை யுடர்ன் அடித்து சென்னைக்கு திருப்பினாள்.

இப்போது நான் ஒரு வெற்றிகரமான சினிமா இயக்குனர். அவளோ ஒரு ஒரு பிரபல ஐடி கம்பெனியில் மிக உயர்ந்த பொறுப்பில். இருவரும் அவரவர் இலக்கை நோக்கி…

Comments