ஆண்கள் ஓரினசேர்க்கை காம கதை : சட்டென்று விலகு

ரவி அந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த போது தான் கலையும் சேர்ந்திருந்தாள். அப்போது ரவிக்கு திருமண வயது. கலைக்கும் ரவியின் வயது என்றாலும் அவள் பெண் என்பதால் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருந்தாள். நிறுவனத்திற்கு அவர்கள் இருவருமே புதியவர்களாக இருந்ததால் மற்றவர்களை விட அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பேச்சு துணையாக இருந்தார்கள். அப்படி ஆரம்பித்த நட்பு, நாளடையில் ரவியின் மேல் உள்ள நம்பிக்கையால் கலை அவளின் குடும்ப விசயங்களை கூட ரவியிடம் பேசுவாள். ரவியும் கூட தனது தனிப்பட்ட, குடும்ப விசயங்களை கலையுடன் பேசுவான்.

மாதங்கள் பல கழிந்திருந்தன. கலை ரவியிடம், அவளின் அந்தரங்க விஷயங்கள் சிலவற்றை இப்போது பேச ஆரம்பித்திருந்தாள். அவளின் மறைமுக பேச்சும், வருத்தமும் ரவிக்கு நாளடையில் சில சந்தேகங்களை எழுப்பியது. எனவே ரவிக்கு கலையின் கணவனை பார்க்க வேண்டும் என்கிற ஆசை. அதை கலையிடம் சொல்லியிருந்தான். அலுவலக நட்பு வீடு வரை வளர்ந்தது. கலையின் கணவனை பார்த்து ரவிக்கு மிகுந்த மகிழ்ச்சி. காரணம், அவன் அவ்வளவு அழகாக இருந்தான்.

கடவுள் பொல்லாதவன்/நல்லவன். அழகாக இருக்கும் ஆணுக்கு எப்போதும் சில குறைகளை வைத்தே படைக்கிறான். கருப்பாக, பார்க்க கரடு முரடாக இருப்பார்கள். ஆனால் அவர்களின் உடம்பு, அந்தரங்க உறுப்பு நாள் முழுக்க பார்க்கவும், அனுபவிக்கவும் கூடியதாக இருக்கும். சிலரின் முகத்தை, உடம்பை பார்த்தவுடன் அனுபவிக்கும் படியாக அழகாக இருப்பார்கள். ஆனால், அவர்களின் அந்தரங்கம் மிக பரிதாபமாக இருக்கும். இது நடைமுறையில் உள்ளது. திருமணமான ஒரு பெண்ணின் முகமே கணவனின் “இரவு வேலையை” காட்டிக்கொடுத்துவிடும் என்று ஊரில் நண்பர்கள் விளையாட்டாக சொல்வதை கேட்டிருப்போம்.

அப்படி தான் கலைக்கும் கணவன் வாய்த்து விட்டான். ஆனால் அது ரவிக்கு இன்பமாக இருந்தது. கலையின் கணவனுக்கு எதனால் செக்ஸ் ஆர்வம் குறைவு என்பதை கண்டுபிடிக்கவே அவனை பார்க்க எண்ணியிருந்தான். அவனை சந்தித்தது முதலே அந்த வேலையை செய்யவும் ஆரம்பித்திருந்தான். ரவி எதிர்பார்த்தது போலவே கலையின் கணவன் ஒருபால் ஈர்ப்பு உள்ளவன் என்பதை உறுதி செய்துக்கொண்டான். ரவி தன்னையும் கூட ஒருபால் ஈர்ப்பு உள்ளவனாக சில நேரங்களில் அவனிடம் காட்டிக்கொண்டான். ஆம். ரவியும் ஓரின ஈர்ப்பு உள்ளவன் தான். அது ரமேஷ்-க்கும் புரிய ஆரம்பித்தது. ஆனால் மனைவின் கூடவே வேலை செய்யும், மனையின் நண்பர் என்கிற எல்லைக்குள் தான் நின்றிருந்தான்.

இருவரின் எல்லையும் ஒருநாள் உடைந்தாக வேண்டும். அதற்குரிய சந்தர்ப்பம் அமைய வேண்டும். சந்தர்ப்பம் தானாக அமையவில்லை என்றால் நாமே அமைத்துக்கொள்ள வேண்டும். அது தான் புத்திசாலித்தனம். இப்போது ரவியும், ரமேஷ்யும் கூட கொஞ்சம் நெருங்கி பழகிவிட்டார்கள். உறுதியற்ற நிலையில் எதையும் வெளிப்படுத்த முடியாதே. அதற்கும் தீர்வானது அவர்களின் மொபைல் போன். இருவரும் ஒருவருக்கொருவர் அடிக்கடி குறுஞ்செய்தி அனுப்பி தங்கள் எண்ணங்களை கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்த தொடங்கினார்கள்.

அன்று, வழக்கம் போல ரவி கலை வீட்டிற்கு செல்ல, அப்போது அவள் வெளியே சென்றிருந்தாள். அந்த தனிமை ரவியை தூண்டியது. ரமேஷ் தன்னை விட பெரியவனாக இருந்ததால் அவனே ஆரம்பிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தான். ஆனால், ரமேஷ் தன்னை அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தான். இருவரும் வெளியே அமைதியாக, ஆனால் மனதில் அமைதியற்று இருந்தார்கள். ரவியின் பார்வை ரமேஷை வலியுறுத்துவது போல இருக்க, ரமேஷ் ரவியை தனது வலது கையால் மெதுவாக இழுத்து பிறகு கட்டிப்பிடித்தான்.

அந்த நொடிப்பொழுதில் எதேச்சையாக கலை வீட்டிற்குள் வர…

இவர்கள் இருவரும் சட்டென்று விலக…. அமைதி.. அசடு வழிதல்…

கலை நிலைமையை உணர்ந்து சகஜ நிலைக்கு திரும்ப எண்ணி ரவியை வரவேற்று “எப்போது வந்தாய்?” என்று விசாரித்து உள்ளே சென்றாள். இப்போது கலைக்கு பல விசயங்களில் தெளிவும், கேள்விகளுக்கு பதிலும் கிடைத்துவிட்டது. நீண்ட நேரம் அமர்ந்திருக்க மனமில்லாமல் ரவி சிறிது நேரத்தில் கிளம்பி விட்டான்.

கலை பார்த்துவிட்டாளோ என்று ரமேஷ்க்கு பெரும் கவலையாகிவிட்டது. இந்நிகழ்வு அவனை வதைக்க, அவனுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் முழிபிதுங்கியது. பெரும் குழப்பத்திற்கிடையில் அன்று இரவில் தன் ஆண்மையை நிரூபிக்க மனதை தயார்படுத்திக் கொண்டான். வாழ்க்கை என்பது தன்னலம் மட்டுமல்ல, தன்னை நேசிப்பவர்களின் நலமும் அடங்கியிருக்கிறது என்பதை புரிந்துக்கொண்டு விட்டால் எல்லாம் இன்பமயம் தான். ஒருவர் மற்றவருக்காக வாழும்போது வாழ்க்கையின் சுவாரசியம் ஒருபோதும் குறையாமல் பார்த்துக்கொள்ள முடியும்.

தனக்கு பிடிக்காவிட்டாலும் தன் மனைவிக்காகவேனும் தன்னிடமுள்ள ஆண்மை முழுவதையும் வலுக்கட்டாயமாக வெளிக்கொண்டுவந்து அன்றிரவு அவளை அணுகினான். அன்று நடந்த நிகழ்வில் அவள் செக்ஸ் அனுபவிக்க கூடிய மனநிலையில் இல்லை. இருப்பினும், தான் பார்த்துவிட்டதை வெளிகாட்டிக்கொள்ள கூடாது, கணவன் மனதை நோகடிக்கக் கூடாது என்று எண்ணி அவனோடு ஒத்துழைக்க முயற்சி செய்தாள். ஒரே கட்டிலில் இரண்டு பேரும் செக்ஸ் செய்கிறார்கள் தன் விருப்பம் இல்லாமல், ஒருவர் மற்றவருக்காக.

Comments