அன்புள்ள ராட்சசி – பகுதி 16

மீராவின் அப்பாவிடம் சிக்கிக்கொண்டு சித்திரவதை அனுபவிப்பதை நினைத்து பார்க்கையில்.. அசோக்கிற்கு உடல் சில்லிட்டு போயிருந்தாலும்.. அதையும் மீறி அவனுடைய மனதில் ஒரு துணிச்சல் துளிர் விடத்தான் செய்தது..!! மீராவின் மீது அவனுக்கிருந்த காதல் தந்த துணிச்சல் அது..!! ‘கஷ்டத்தை எண்ணிக்கொண்டு காதலை தவிர்த்தல் கோழைத்தனம் அல்லவா..?? காதலையே வாழ்க்கையாக கொண்ட குடும்பத்தில் பிறந்துவிட்டு, இதற்கெல்லாமா கவலைப்படுவது..??’ என்று தோன்றியது. அந்த மாதிரி ஒரு எண்ணம் வந்ததுமே, பேசிக்கொண்டிருந்த மீராவை இடைமறித்து அசோக் சொன்னான்.

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

“இங்க பாரு மீரா.. இதெல்லாம் நீ எனக்கு சொல்லனும்னு அவசியம் இல்ல..!! எனக்கு ஒன்னும் உன் அப்பாவ நெனச்சு பயம் இல்ல.. என்ன ஆனாலும் சரி.. எவ்வளவு கஷ்டம் அனுபவிக்க வேண்டி இருந்தாலும் சரி.. என் கடைசி மூச்சு இருக்குறவரை இந்த காதல்ல நான் ஸ்ட்ராங்கா இருப்பேன்.. உன்னை லவ் பண்ணதுக்கு தண்டனை சாவுதான்னா.. அது எனக்கு சந்தோஷம்தான்..!!”

அசோக் உறுதியான குரலில் சொல்லிவிட்டு மீராவை பார்க்க, அவளும் இப்போது அமைதியாக இவனுடைய முகத்தையே பார்த்தாள். ஒருமாதிரி.. இமைகளை அசைக்காமல்.. மிக கூர்மையாக ஒரு பார்வை..!! ஒரு நான்கைந்து வினாடிகள்..!! அப்புறம் இதழில் ஒரு அழகுப் புன்னகையுடன்.. கொஞ்சும் குரலில் சொன்னாள்..!!

“ச்சோ.. ச்வீட்..!!”

மீரா அந்த மாதிரி கொஞ்சியது அசோக்கிற்கு குளுகுளுவென்று இருந்தது. அவனையும் அறியாமல் அவனுடைய முகம் வெட்கத்தில் சிவந்து போனது. அந்த வெட்கத்துடனே..

“ப்ச்.. போ மீரா.. நான் சீரியஸா சொல்லிட்டு இருக்குறேன்..!!”

என்றவாறு தலையை குனிந்து கொண்டான். இப்போது மீரா சில வினாடிகள் அமைதியாக இருந்தாள். அப்புறம் திடீரென ஒருவித உற்சாக குரலில் கேட்டாள்.

“ஹேய் அசோக்.. எனக்காக நீ என்ன வேணா பண்ணுவியா..??”

“என்ன மீரா இப்படி கேட்டுட்ட..?? என்ன பண்ணனும்.. சொல்லு..!!”

“அந்த டேபிள்ள ரெண்டு பேரு என்னையே மொறைச்சு பாத்துட்டு இருக்கானுக.. சும்மா சும்மா என்னை பாத்து கண்ணடிக்கிறாணுக..!! கொஞ்சம் அவனுகளை போய் என்னன்னு கேக்குறியா..??”

அவ்வளவுதான்..!! அசோக் விருட்டென நிமிர்ந்தான். அவன் உடம்பில் அப்படி ஒரு விறைப்பு.. நாடி நரம்பெல்லாம் அப்படி ஒரு புடைப்பு..!! ‘நான் அருகில் இருக்கும்போதே, என் காதலியை ஒருவன் ஹராஸ் செய்வதா..?? துடிக்குது புஜம்.. ஜெயிப்பது நிஜம்..!!’

“யார் அவனுக..??”

என்று பல்லை கடித்தவாறு, சரக்கென திரும்பினான். திரும்பி அந்த டேபிளில் அமர்ந்திருந்தவர்களை பார்த்ததுமே, அவனுடைய விறைப்பு புடைப்பு அடைப்பு எல்லாம் பொசுக்கென்று அடங்கிப் போனது.

அந்த இரண்டு பேர்.. மனிதர்களே அல்ல, மாமிச மலைகள் போல தோற்றமளித்தனர்..!! ஒருவன் ஜான் ஸீனா மாதிரி இருந்தான்.. அடுத்தவன் அண்டர் டேக்கர் கணக்காக காட்சியளித்தான்..!! இப்போதுதான் மல்யுத்தத்தை முடித்துவிட்டு.. மதிய உணவுக்காக ப்ரேக்கில் வந்திருப்பார்கள் போலிருக்கிறது..!! ஆட்டுத்தொடை போல ஆளுக்கொன்றை கையில் வைத்துக்கொண்டு.. கடித்து இழுத்துக் கொண்டிருந்தனர்..!! அவர்கள் சாப்பிடுவதே சண்டை போடுவது மாதிரி படுபயங்கரமாக இருந்தது..!!

அசோக் அவர்களையே பரிதாபமாக ஒரு பார்வை பார்த்தான்..!! ‘ஒரு.. ஓமக்குச்சி நரசிம்மன்.. ஒருவிரல் கிருஷ்ணராவ்.. இந்த மாதிரிலாம் யாராவது என் லவ்வரை சைட் அடிக்க கூடாதா..?? எனக்குன்னு எங்க இருந்துடா கெளம்பி வர்றீங்க..?? ச்சை..!!’

“என்ன அசோக்.. பாத்துட்டே இருக்க.. போ.. போய் அவனுகளை ரெண்டு விடு..!!”

‘ரெண்டு விடவா.. அவனுக ஒன்னு விட்டாலே நான் ஒருவாரத்துக்கு பெட் ரெஸ்ட் எடுக்கனுமே..??’ மனதுக்குள் நினைத்த அசோக், பயத்துடன் எச்சில் விழுங்கினான். ‘ஏதாவது செய்தாக வேண்டும்.. இல்லாவிட்டால் என்னைப் பற்றி கேவலமாக நினைத்து விடுவாள்..!!’. ஒரு முடிவுக்கு வந்த அசோக், இப்போது மீராவிடம் திரும்பி சொன்னான்.

“இ..இங்க பாரு மீரா.. பெரியவங்கள்லாம் என்ன சொல்லிருக்காங்க..??”

“என்ன சொல்லிருக்காங்க..??”

“சாம.. தான.. பேத.. தண்டம்..!!”

“தண்டமா..?? யாரு தண்டம்..??”

“ஐயோ.. யாரும் தண்டம் இல்ல..!! தண்டம்னா அடிதடின்னு அர்த்தம்.. அதை லாஸ்ட் வெப்பனாத்தான் யூஸ் பண்ணனும்னு பெரியவங்க அட்வைஸ் பண்ணிருக்காங்க..!!”

“சரி.. அதுக்கு..??”

“நான் மொதல்ல போய் அவங்கட்ட பேசி பாக்குறேன்.. செஞ்ச தப்பை அவங்களே ஒத்துக்கிட்டு.. உன்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டாங்கன்னு வச்சுக்கோ.. அதுக்கப்புறம் எதுக்கு இந்த அடிதடிலாம்..?? அவங்கள அப்படியே மன்னிச்சு விட்ரலாம்.. பாவம்..!! சரியா..??”

“ம்ம்.. சரி..!!”

மீரா திருப்தியில்லாமல் தலையசைக்க.. அசோக் இப்போது சேரில் இருந்து மெல்ல எழுந்து கொண்டான்..!! பில்டிங் ஸ்ட்ராங்காக, பேஸ்மட்டம் வீக்காக ஒரு நடை நடந்து.. அந்த மாமிச மலைகளை நோக்கி சென்றான்..!! அவர்களுடைய தலை கவிழ்ந்து போயிருக்க.. இரு கைகளாலும் இறைச்சியை பிடித்து.. கவனமாக கடித்து குதறிக் கொண்டிருந்தனர்..!! அவர்களை நெருங்கிய அசோக் மெல்ல ஆரம்பித்தான்..

“ஹாய்.. மிஸ்டர் அண்டர் டேக்கர்..!!” அவன் அழைத்ததும், இருவரும் நிமிர்ந்தனர்.

“க்யா..????” என்று வாயை பிளந்தான் ஒருவன் மட்டும். வட நாட்டவர் போல..!!

“இ..இங்க பாருங்க.. நீங்க பண்ணினது தப்பு..!! நீ..நீங்க பாக்குறதுக்குலாம் பயங்கர டெரராத்தான் இருக்கீங்க.. அதெல்லாம் நான் இல்லைன்னே சொல்லல.. ஆனாலும் நீங்க பண்ணினது தப்பு..!! அழகா இருக்கான்றதுக்காக அடுத்தவன் கேர்ள் பிரண்டை பாத்து கண்ணடிக்கிறது.. இட்ஸ் டூ பேட் யு நோ.. ரொ..ரொம்ப ரொம்ப தப்பு…!! கமான்.. வாங்க.. வந்து என் ஆள்ட்ட ஒரு ஸாரி கேட்டுடுங்க.. கமான்..!!”

அசோக் ஒருமாதிரி தடுமாற்றமும், சமாளிப்புமாய் சொல்லி முடித்தான். இவனையே கேவலமாக ஒரு லுக் விட்டுக்கொண்டிருந்த மாமிச மலைகள் இருவரும், இப்போது அவர்களுக்குள் திரும்பி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பிறகு மீண்டும் அசோக் பக்கமாய் திரும்பினர். அண்டர் டேக்கர் இப்போது அசோக்கிடம் சொன்னான்.

“அந்த புண்ணுதான் எங்ளே பாத்து கண்ணு அட்ச்சுசு..!!”

“வாட்..???” அசோக் நம்பமுடியாமல் கேட்க,

“அந்த பொண்ணுதான் எங்ளே பாத்து கண்ணு அடிச்சுச்சு..!!” என்றான் ஜான் ஸீனா பெட்டர் டமிலில். அசோக்கிற்கு இப்போது சிரிப்பை அடக்க முடியவில்லை.

“ஹாஹாஹாஹா.. என்னங்க நீங்க காமடி பண்றீங்க.. பொய் சொன்னாலும் கொஞ்சம் பொருத்தமா சொல்றது இல்லையா..?? ஹையோ.. ஹையோ..!!”

“க்யா..?? க்யா போல்த்தா..??”

“பின்ன என்னங்க..?? அங்க பாருங்க என் ஆளை.. எப்டி செதுக்குன சிலை மாதிரி இருக்குறா பாருங்க.. அவ போய் செனப்பன்னி மாதிரி இருக்குற உங்களை பாத்து கண்ணடிச்சான்னு சொன்னா… எப்படிங்க நம்புறது..??”

ஏதோ ஒரு ஃப்ளோவில் அசோக் அவ்வாறு சொல்லிவிட்டான். ஆனால் சொன்னபிறகு அவசரப்பட்டு சொல்லிவிட்டோமோ என்று ஃபீல் செய்தான். அதற்கு ஏற்ற மாதிரி, அவர்களும் இப்போது அசோக்கை உர்ரென்று முறைத்தனர். பிறகு கையில் இருந்த மாமிசத்தை தட்டில் வைத்துவிட்டு.. இருவரும் ஒரே நேரத்தில் எழுந்தனர்.. ஒரே நேரத்தில் முஷ்டியை மடக்கினர்.. ஒரே நேரத்தில் அசோக்கின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டனர்..!!

அடுத்த நொடி அசோக் மீரா அமர்ந்திருந்த டேபிளில் வந்து கிடந்தான்..!! என்ன நடந்தது என்றே அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.. இரண்டு கன்னங்களும் திகுதிகுவென எரிந்தன.. உதட்டோரம் கசிந்த ரத்தம் உப்புக் கரித்தது.. மூளைக்குள் மினி ஸ்டார்ஸ் பறந்தன.. மண்டைக்குள் கிணிகிணிகிணியென மணியடித்தது..!! அசோக் வீங்கிப்போன முகத்துடன் மீராவை ஏறிட்டு பரிதாபமாக பார்த்தான். அவளோ இருகைகளாலும் கன்னத்தை பொத்திக்கொண்டு..

“ஹைய்யயோ..!!” என்றாள் வடிவேலு வாய்ஸில்.

அந்தக்குரலில் இருந்தது.. ஆச்சரியமா.. அதிர்ச்சியா.. வருத்தமா.. சோகமா.. சந்தோஷமா..?? எதுவும் புரியவில்லை அசோக்கிற்கு..!!!

அத்தியாயம் 10

வீங்கிப்போன முகத்துடன், அசோக்குக்கு மூக்கும் சேர்ந்து கிழிந்திருந்தது. அவனுடைய உருண்டையான நீளமான மூக்கின் மையப்பகுதியில், குறுக்குவாக்கில் ஒரு கீறல். தோல் பெயர்ந்து வந்திருக்க, அதன் வழியே ரத்தம் துளிர்த்திருந்தது. அன்டர்டேக்கர் தன் விரலில் அணிந்திருந்த மண்டையோடு மோதிரம்தான் அதற்கு காரணமாயிருக்க வேண்டும். அசோக் மூக்கை இருபுறமும் பிடித்துக்கொண்டு, ‘உஷ்.. உஷ்.. உஷ்..’ என உதடுகள் குவித்து காற்று ஊதிக்கொண்டிருந்தான். மீரா தன் பேகை கையிலெடுத்து பக்கவாட்டு ஜிப்பை திறந்தாள். உள்ளே விதவிதமாய் மாத்திரைப் பட்டைகள்.. ஒன்றிரண்டு ஆய்ன்மென்ட்கள்.. பேண்டேஜ்.. பிளாஸ்டர்..!!

“ம்ம்.. கையை எடு..!!” மீரா சொல்ல, அசோக் மூக்கிலிருந்து கைகளை விலக்கிக் கொண்டான்.

மீரா அசோக்கின் மூக்கில் கொஞ்சமாய் கொப்பளித்திருந்த ரத்தத்தை பஞ்சால் துடைத்து சுத்தம் செய்தாள். அப்புறம் ப்ளாஸ்டர் பிரித்து, சரக்கென இழுத்து, அசோக்கின் மூக்குக்கு குறுக்காக அழுத்தமாக ஒட்டிவிட்டாள்.

“ஹ்ஹ்ஹ்ஹா..!!” வேதனையில் முனகினான் அசோக்.

“ப்ச்.. ரொம்ப பெனாத்தாத..!! ஒன்னுல்ல.. ஒரே நாள்ல சரியாயிடும்..!!”

மீரா கூலாக சொல்லிக்கொண்டிருக்க, அந்தப்பக்கம் அண்டர்டேகரும், ஜான் ஸீனாவும் சாப்பிட்டு முடித்து எழுந்தார்கள். நடந்து இவர்களை நெருங்கியவர்கள், அசோக்கின் முதுகை செல்லமாக தட்டினர்.

“வாய் ப்ராப்பர் இல்லே உன்க்கு.. அதான் மூக்லே ப்ளாஸ்டர்..!!” என்றான் அண்டர்டேகர்.

“டேக் கேர் பாய்..!!” என்று கிண்டலாக சொன்னான் ஜான் ஸீனா. கேஷுவலாக சொல்லிவிட்டு இருவரும் திரும்பி நடந்தார்கள்.

“ஏய்.. போங்கடா..!! மூக்கை பேத்துட்டு.. டேக் கேராம்.. டேக் கேர்..!!”

மீரா அவர்களுடைய முதுகை பார்த்து சீறினாள். டேபிளில் கிடந்த மிளகாய் துகள் பாக்கெட்டுகளை அள்ளி, அவர்கள் மீது வீசினாள். அவர்கள் இருவரும் அவளை கண்டுகொள்ளமல் அங்கிருந்து அகன்றனர். அண்டர்டேகர் மட்டும் திரும்பிபார்த்து ஒருமுறை ‘க்யா..??’ என்று வாயை பிளந்தான்.

“ப்ச்.. விடு மீரா.. அவனுகளை எதுக்கு திட்டுற..??” அசோக் சலிப்பாக சொன்னான்.

“ஏன்.. திரும்ப வந்துடுவானுகனு பயமா..??” மீராவின் குரலில் ஒரு நக்கல்.

“இல்ல.. அவனுக மேல எதுவும் தப்பு இல்லைன்னு எனக்கு தோணுது..!!”

“ஓ..!! இது எப்போ இருந்து..?? அவனுக ரெண்டு அப்பு அப்புனதுல இருந்தா..??”

“இல்ல.. அதுக்கு முன்னாடியே ஒரு மைல்ட் டவுட் வந்தது.. நான்தான் கொஞ்சம் மெதப்புல பேசிப்புட்டேன்..!!”

“எ..என்ன சொல்ல வர்ற..??”

“உண்மைய சொல்லு மீரா.. நீதான அவனுகளை பாத்து கண்ணடிச்ச..??” அசோக் அந்த மாதிரி நேரிடையாகவே கேட்டுவிட, இப்போது மீரா கண்களை இடுக்கி அவனை முறைத்தாள்.

“ஏன்.. அவனுகள்ட்ட வாங்குனதுலாம் பத்தலையா..??” என்று முஷ்டியை முறுக்கினாள். அசோக் நொந்து போனான்.

“ஐயோ தாயே.. ஆளை விடு.. உன்னை நான் ஒன்ன்ன்னும் கேக்கல..!!” என்றவாறே அவன் கைகூப்ப, மீராவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

“ஹாஹாஹாஹா..!!” கலகலவென சிரித்தாள்.

“அவனுக குடுத்ததே மூஞ்சிலாம் வின்வின்னுனு தெறிக்குது..!!” அசோக் சோகமாக சொல்ல, மீரா இப்போது அவனை சற்றே பரிதாபமாக பார்த்தாள்.

“ரொம்ப வலிக்குதா..??” அவளுடைய குரலில் புதிதாக ஒரு கனிவு.

“ம்ம்.. முடியல..!! அவனுகட்ட இருக்குறது கையா தும்பிக்கையான்னு தெரியல..!!”

“ஹாஹா.. சரி.. இரு..” சிரிப்புடன் சொன்ன மீரா, பேகிற்குள் கைவிட்டாள். சிவப்பாய் இருந்த இரண்டு மாத்திரகளை எடுத்து அசோக்கிடம் நீட்டினாள்.

– தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments