அன்புள்ள ராட்சசி – பகுதி 64

“சரி வந்ததுதான் வந்தோம்.. செல்ஃபோனை மட்டும் எடுத்துட்டு எஸ்கேப் ஆகலாம்னு வெளிய வந்தா.. உன் கன்ஃப்யூசன் வேற..!!”

“என் கன்ஃப்யூசனா..??”

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

“ஆமாம்.. அந்த எஸ்.பியும் நீயும் ஜோடி போட்டு நடந்து வர்றீங்க..!! எனக்கு கொஞ்ச நேரம் என்ன பண்றதுன்னே புரியல..!! அப்புறம் பட்டுன்னு சுதாரிச்சு.. பின்பக்கமா ஓடி எஸ்கேப் ஆனேன்..!! செமையா கொழப்பி விட்டுட்ட என்னை..!!”

“ம்க்கும்..!! நீ என்னை கொழப்பி விட்டதை விடவா..??”

“ஹாஹா..!! ஆனா ஒன்னு.. நீ பண்ணுன கொழப்பத்துல ஒரே ஒரு நல்ல காரியம் நடந்திருக்கு..!!”

“என்ன..??”

“ஹ்ம்ம்.. தங்கம் விக்கிற வெலைல.. ஆறு கிராம் இப்படி அநியாயமா தொலைஞ்சு போச்சேன்னு ரொம்ப கவலைல இருந்தேன்.. உன் மூலமா அது என்கிட்டயே திரும்ப வந்து சேர்ந்துடுச்சு..!!”

புன்னகையுடன் சொன்ன மீரா.. தனது வலது கையை உயர்த்தி அசைத்துக்காட்ட.. அந்தக்கையை தழுவியிருந்த புதியதொரு ப்ரேஸ்லட்டில்.. அந்த இதயவடிவ பென்டன்ட் ஊசலாடியது..!! அவள் சொன்னதைக்கேட்டு அசோக் சிரிக்க.. அவனுடன் சேர்ந்து மீராவும் சிரித்தாள்..!! ஒருசில வினாடிகள் மத்தாப்பு சிதறலாய் சிரித்தவள்.. திடீரென ஞாபகம் வந்து கேட்டாள்..!!

“அதுசரி.. இதுக்கெதுக்கு நீ ந்யூஸ் பேப்பரை மறைச்ச..??”

“ஒ..ஒன்னும் இல்ல..!!” அசோக்கிடம் மீண்டும் அதே திருட்டுமுழி.

“ஹேய்.. சொல்லுடா..!!”

“ஒன்னும் இல்லன்னு சொல்றேன்ல..!!”

“இல்ல.. ஏதோ இருக்கு.. சொல்லு..!!”

“ம்ம்ம்ம்ம்.. சொல்றேன்.. ஆனா.. நீ என்னை கிண்டல் பண்ணக்கூடாது..!!”

“என்ன.. ஓவரா பில்டப்லாம் குடுக்குற..!!”

“பண்ணமாட்டேன்னு சொல்லு..!!”

“சரி..!! பண்ணமாட்டேன்..!!”

“ப்ராமிஸ்..??”

“ப்ராமிஸ்டா..!! சொல்லு..!!”

அசோக் இப்போது சற்றே தயக்கத்துடன்.. அந்த நாளிதழை விரித்து மீராவிடம் காட்டினான்..!! அதில் அச்சிடப்பட்டிருந்த அந்த கொலையாளிகளின் புகைப்படங்களை சுட்டிக்காட்டி அவளிடம் கேட்டான்..!!

“இந்த மூஞ்சிகளை எல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கா..??”

அவன் அவ்வாறு கேட்டதும், மீராவின் முகத்தில் ஒரு குழப்பம்.

“இ..இல்லையே.. யார் இவங்க..??”

“ஹ்ம்ம்.. நீ வேணா மறந்திருக்கலாம்.. என்னால ஜென்மத்துக்கும் இந்த அழகு மூஞ்சிகளை மறக்கவே முடியாது..!!”

“நான் வேணா மறந்திருக்கலாமா..?? நா..நான் பாத்திருக்கேனா இவங்கள..??”

“ம்ம்.. ஆமாம்..!! ஒருதடவை KFCல வச்சு.. இவங்கள பாத்து.. ‘நீங்க தேடிட்டு இருக்குற ஆள் இவன்தான்.. இவன்தான்’ன்னு கத்துனியே..!! ஞாபகம் இருக்கா..??” அசோக் அவ்வாறு சொன்னதும், இப்போது மீராவுக்கு பட்டென அந்த நிகழ்வு ஞாபகத்திற்கு வந்தது.

“ஹேய்ய்ய்.. அ..அது.. அவங்க.. நான் உன்கிட்ட குடுத்த தப்பான மொபைல் நம்பருக்கு கால் பண்ணி.. அதுல பிரச்சினையாகி.. உன்னை போட்டு தள்றதுக்காக ஒரு க்ரூப்.. டாடா சுமோல அலையுதுன்னு சொல்வியே.. அவங்கதான..??”

“ம்ம்ம்..!! ஆனா.. அவங்க என்னை போட்டு தள்றதுக்காக அலையலை..!!”

“அப்புறம்..??”

“இந்த காசியை போட்டு தள்றதுக்காகத்தான் அப்போ இருந்தே அலைஞ்சிருக்காங்க.. எனக்கே இன்னைக்குத்தான் தெரியும்..!!”

“எ..என்ன சொல்ற நீ..?? எனக்கு புரியல..!! உன்னை ஃபோன்ல மிரட்டுனாங்கன்னு..”

“ஆமாம் மீரா..!! ஃபோன்ல என்னை மிரட்டினது உண்மைதான்..!! ஆனா.. ஃபோன்ல மிரட்டினது வேற க்ரூப்பு.. டாடா சுமோல விரட்டினது வேற க்ரூப்பு..!! ஃபோன்ல பேசி முடிச்சதும், பக்கத்துல அந்த டாடா சுமோ வந்து நிக்கவும்.. ரெண்டும் ஒரே க்ரூப்புதான்னு நெனச்சு நான்தான் கொஞ்சம் கன்ஃப்யூஸ் ஆகிட்டேன்..!! ரொம்ப நாளா அவனுகள பாக்குறப்போலாம் பம்மிட்டு இருந்தேன்..!!”

அசோக் பரிதாபமாக சொல்லிக்கொண்டிருக்க, மீராவால் சிரிப்பை அடக்க முடியவில்லை. வயிறை பிடித்துக்கொண்டு, வாயை பொத்திக்கொண்டு குலுங்கி குலுங்கி சிரித்தாள்.

“ஹாஹாஹாஹாஹாஹா..!!”

மீராவின் சிரிப்பு அசோக்கின் முகத்தை பட்டென சுருங்கிப் போக வைத்தது.

“ஹேய்… சி..சிரிக்காத மீரா.. ப்ளீஸ்..!!”

“ஹாஹா..!!! ஹையோ.. என் அறிவுக்கொழுந்தே.. முடியலடா..!! எவனோ எவனையோ கொலை பண்ண வெரட்டிருக்கான்.. நீ என்னடான்னா அவனுகளுக்கு பயந்துக்கிட்டு.. உன்னோட சிம் கார்ட்லாம் மாத்தி.. சிவன் கோயில்ல அங்க பிரதட்சணம்லாம் பண்ணி.. எந்த நேரமும் ஒரு மரண பீதியோடவே திரிஞ்சிருக்குற..!! எடுத்த கவாஸாகி ஆட்ல அந்த எஃபக்ட்லாம் வேற..!! ஹ்ம்ம்… வடிவேலை தூக்கி சாப்பிட்டுட்ட நீ..!! செம்ம காமடி போ..!! ஹாஹாஹாஹாஹா..!!” மீரா இடைவிடாமல் தொடர்ந்து சிரிக்க, எரிச்சலான அசோக்

“ப்ச்..!! பாத்தியா.. இதுக்குத்தான் உன்கிட்ட சொல்ல மாட்டேன்னு சொன்னேன்..!! போடீ..!!” கடுப்புடன் சொன்னவாறு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

“டேய் டேய்.. ஸாரிடா.. ஸாரிஈஈ..!! என் செல்லம்ல.. என் அம்முல..??” கொஞ்சிக்கொண்டே அவனை சமாதானம் செய்ய பின்னால் ஓடினாள் மீரா.

—————————–XXXXXXXXXXXXX—————————–

மீராவிடம் அன்று பல்பு வாங்கியிருந்தாலும்.. மலரவனிடம் அசோக் பாராட்டு வாங்கியிருந்தான்..!! ரெட்ஹில்ஸ் கொலை வழக்கில் அவனுடைய ஒத்துழைப்பை குறிப்பிட்டு.. காவல்த்துறை அவனுக்கு கடமைப்பட்டிருப்பதாக நன்றியுரைத்தார்..!!

அதன்பிறகும் இரண்டு மூன்று முறை.. அசோக் ஸ்ரீனிவாச பிரசாத்துடன் சென்று மலரவனை சந்திக்க நேர்ந்தது..!! விரைவிலேயே.. ஸ்ரீனிவாச பிரசாத்தை போலவே.. மலரவனும் அசோக்குக்கு நட்பாகிப் போனார்..!! மூவருக்குள்ளும் எந்த மாதிரி நட்பென்று சொல்லவேண்டுமானால்..

மாதவரத்தில் உள்ள ஒரு போலீஸ் குவார்டர்ஸில்.. மலரவனுக்கென்று அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட அப்பார்ட்மன்டில்.. மதுரையில் அழகர் ஆற்றில் இறங்குவதைக்காண மனைவியை அவர் அனுப்பி வைத்திருந்த சமயத்தில்.. இவர்கள் மூவரும் ஒன்றாக அமர்ந்து விஸ்கி சுவைக்கிற அளவுக்கு..!! சரக்கடித்து மட்டையாக நினைத்தவர்கள்.. தொட்டுக்கொள்ள ஊறுகாய் வேண்டுமென்று.. மணலி வரை சென்று மனோகரை பிக்கப் செய்துகொள்ளும் அளவிற்கு..!!

டீப்பாயில் இருந்த டீச்சர்ஸ் பாட்டில் பாதிக்கும் மேல் காலியாகி இருந்தது.. அருகிலேயே மூன்று கண்ணாடி டம்ளர்களும், மூடி திறக்கப்பட்ட ஐஸ் பெட்டியும்..!! டீப்பாயை சுற்றிக்கிடந்த மூன்று சோபாக்களில் டீச்சர்சை உள்ளே தள்ளிவிட்டு.. உச்சிவரை ஏறிய போதையுடன்.. உல்லாச நிலையில் அசோக்கும், ஸ்ரீனிவாச பிரசாத்தும், மலரவனும்..!! மனோகர் மட்டும் தரையில் ஜட்டியுடன் அமர்ந்திருந்தான்.. அவனுடைய முகம் அடியும், குத்தும், மிதியும் வாங்கி.. சிற்றெரும்பு புற்றுக்குள் தலையைவிட்ட குரங்கின் முகத்தைப்போல.. கோணல்மாணலாக வீங்கி சிவந்து கிடந்தது..!!

“இனி தண்ணி அடிக்கிறப்போலாம் இவனை இழுத்துட்டு வந்துரலாம் ஸார்.. செம்ம மஸாவா இருக்கு..!!”

மலவரன் குழறலாக சொன்னார். மனோகர் அவரை பரிதாபமாக பார்த்தான்.

“டேய்.. இது ரெண்டுல ஒன்னை தொடு..!!”

ஸ்ரீனிவாச பிரசாத்தும் வாய்க்குழறலோடு தனது வலதுகை விரல்களை மனோகரிடம் நீட்டினார். அவனும் தயங்கி தயங்கி ஒரு விரலை தொட்டுக்காட்ட, ஸ்ரீனிவாச பிரசாத் இப்போது மலரவனிடம் திரும்பி சொன்னார்.

“ம்ம்.. அவனே சொல்லிட்டான் ஸார்.. இவனை ப்ராத்தல் கேஸ்ல புக் பண்ணிற வேண்டியதுதான்..!! பொண்ணுகளை வச்சு பிசினஸ் பண்ணினான்.. ப்ரோக்கர் வேலை பாத்தான்னு சொல்லி ஒரு செட்டப் பண்ணி.. உள்ள தூக்கி போட்ருவோம்..!! ‘மாமாப்பய.. மாமாப்பய..’ன்னு எல்லாரும் இவனை கூப்பிடனும்.. இவன் நாக்கை புடுங்கிட்டு சாவனும்..!!”

“ஐயையே.. அதுலாம் வேலைக்காவாது ஸார்.. அந்த மாதிரி செட்டப் பண்றதுலாம் ரொம்ப கஷ்டம்..!! பேசாம.. அந்தக்காசிப்பய மாதிரி இவனும் கஞ்சாப்பொட்டலம் வித்தான்னு சொல்லி செட்டப் பண்ணிரலாம்.. அதுதான் ரொம்ப ஈஸி..!! நார்கோடிக்ஸ் டிப்பார்ட்மண்ட்லதான் உங்களுக்கு தெரிஞ்ச ஆளுங்க நெறைய இருக்காங்களே.. வேலை ரொம்ப ஈசியா முடிஞ்சிடும்..!! எனக்கு புழல் ஜெயில்ல நெறைய ஆளுங்க இருக்காங்க.. நம்ம பையன் உள்ள இருக்குற ஒவ்வொரு நாளையும் மறக்க முடியாத மாதிரி பண்ணிருவோம்.. வெளில வர்றப்போ எல்லாம் சூம்பி சுருங்கிப் போய்தான் வருவான்..!! என்ன சொல்றீங்க..??”

“இல்ல ஸார்.. ப்ராத்தல் கேஸ்தான் ரொம்ப கேவலமான கேஸ்.. அதுலதான் இவனை உள்ள போடுறோம்.. நான் டிஸைட் பண்ணிட்டேன்..!!”

“இல்ல ஸார்.. கஞ்சா கேஸ்தான்..!!”

எந்த கேஸில் தன்னை உள்ளே தூக்கிப் போடுவது என்று.. இரண்டு இன்ஸ்பெக்டர்களும் சண்டையிட்டுக் கொண்டிருக்க.. மனோகரோ மிரண்டு போய் அவர்களை பார்த்தான்..!!

“ஸார் ஸார்.. அப்டிலாம் பண்ணிராதிங்க ஸார்.. இனி நான் எந்த தப்பும் பண்ண மாட்டேன்.. ப்ளீஸ் ஸார்..!!”

என்று கெஞ்சினான்.. கையெடுத்து அவர்களை கும்பிட்டான்..!! அவனுடைய கண்களில் கண்ணீர் அரும்ப, ஸ்ரீனிவாச பிரசாத்துக்கு அவன் மீது சற்றே இறக்கம் வந்தது..!! இறக்கம் வந்தும்..

“நம்பலாமா..??” என்று முறைப்பாகவே கேட்டார்.

“நம்பலாம் ஸார்.. சத்தியமா இனிமே நல்ல புள்ளையா நடந்துக்குறேன்..!!”

“ம்ம்ம்ம்.. தட்டிக்கேட்க ஆளு இல்லன்னா, சேட்டை பண்ண தோணுது உங்களுக்குலாம்.. இல்ல..?? இனிமே எந்தப் பொண்ணுட்டயாவது வாலாட்டுனன்னு தெரிஞ்சுச்சு.. அப்புறம் மவனே ஆட்டுறதுக்கு எதுவுமே இருக்காது உன்கிட்ட..!! புரியுதா..??” ஸ்ரீனிவாச பிரசாத் நாக்கை துருத்தி எச்சரித்தார்.

“புரியுது ஸார்..!!”

“அப்படியே பிதுக்கிப்புடுவேன் பிதுக்கி..!! அடுத்த ரவுண்டு ஊத்து..!!”

ஸ்ரீனிவாச பிரசாத் ஆர்டர் போட.. மனோகர் அதற்காகத்தான் காத்திருந்தவன் போல.. விஸ்கி பாட்டில் திறந்து.. க்ளாஸில் ஊற்றி.. ஐஸ்க்யூப்ஸ் அள்ளிப்போட்டு.. பவ்யமாக அவரிடம் நீட்டினான்..!! நீட்டியவன்.. அப்படியே முகத்தை திருப்பி.. அசோக்கை ஓரக்கண்ணால் ஒரு பார்வை பார்த்தான்..!! அசோக்கோ.. அங்கு நடக்கும் சம்பவங்களுக்கும் அவனுக்கும் சற்றுகூட சம்பந்தம் இல்லாதவன் மாதிரி.. வாங்கி வந்திருந்த சிப்ஸை வாய் நிறைய போட்டு அரைத்துக் கொண்டிருந்தான்..!!

—————————–XXXXXXXXXXXXX—————————–

தி.நகரில் நகைக்கடை வைத்திருக்கிற மாணிக்சந்த் சேட்டிற்கு.. கருப்புப்பணத்தின் வைத்திருப்பு அதிகமாகிப் போய்.. பெருத்த அவஸ்தையில் இருந்தார்..!! எப்படியாவது அவற்றை வெள்ளைப்பணமாக மாற்றிவிடவேண்டும் என்ற எண்ணத்துடன்.. அவருடைய ஜ்வல்லரி ஷாப் விளம்பரத்தை, ஸ்னேஹாவை வைத்து முடித்துக் கொடுத்ததன் மூலம் நட்பாகியிருந்த மோகன்ராஜிடம்.. அடுத்த விளம்பரத்திற்கு அனுஷ்காதான் என்று தீர்க்கமாக சொல்லிவிட்டு.. அவருடைய அவஸ்தைக்கான ஆலோசனையும் கேட்டார்..!! அவருக்கு ஆலோசனை சொன்ன மோகன்ராஜ்..

“எனக்கு தெரிஞ்ச ஒரு பையன் இருக்குறான்.. நாளைக்கு அவனை அனுப்பி வைக்கவா..??” என்று கேட்டார்.

அடுத்த நாள் காலையே.. மாணிக்சந்த்தின் அலுவலக அறையில்.. அசோக் அவருக்கு கதை சொல்லிக் கொண்டிருந்தான்..!!

“செனைப்பன்னிங்க மாதிரி ரெண்டு பேரு ஸார்.. ஒவ்வொருத்தனும் ஒரு முன்னூறு கிலோ இருப்பானுகன்னு வச்சுகோங்க.. வயிறுலாம் அப்படியே வாட்டர் டேங்க் மாதிரி இருக்கு.. கைலாம் கர்லா கட்டை மாதிரி இருக்கு.. காட்டெருமைங்க நாட்டுக்குள்ள தப்பிச்சு வந்தா எப்டி இருக்கும்.. அந்த மாதிரி..!! ரெண்டு பேரும் ஒரே நேரத்துல கையை மடக்கி.. நம்ம ஹீரோ மூஞ்சில ஓங்கி ஒரு குத்து விடுறானுக..!! அவ்வளவுதான்.. நம்ம ஹீரோ அப்படியே ஏர்ல பாஸாகி வந்து.. ஹீரோயின் இருக்குற டேபிள்ளயே டமால்னு விழுறான்..!! ஹீரோயின் சீக்ரட்டா சிரிக்குறா.. அந்த செனைப்பன்னிங்க ரெண்டும் முறைக்குதுங்க..!!” அசோக் ஆக்ஷனுடன் காட்சியை விவரிக்க..

“ஹாஹாஹா.. மஸா ஹே.. பஹுத் மஸா ஆ ரஹா ஹே..!! ஹாஹாஹா..!!” மாணிக்சந்த் தனது தொப்பை குலுங்க சிரித்துக் கொண்டிருந்தார்.

“இப்போ அந்த காட்டுப்பன்னிங்க ரெண்டு பேரும்..” அசோக் மேலும் ஆர்வமாக ஆரம்பிக்க,

“ஆங்.. ஆவ் பேட்டா ஆவ்..!!”

மாணிக்சந்த் அவனுக்கு பின்புறமாக பார்த்து சொன்னார்.. உடனே அசோக்கும் பின்னால் திரும்பி பார்த்தான்.. பார்த்தவன் அப்படியே பக்கென மிரண்டு போனான்..!! அங்கே.. அவர்கள்.. அந்த அண்டர்டேக்கரும், ஜான் ஸீனாவும்.. மீராவின் சில்மிஷத்தால், அசோக்கின் முகத்தில் நிஜமாகவே பஞ்ச் விட்டவர்கள்.. இப்போது இவனை எரித்துவிடுவதுபோல முறைத்துக் கொண்டிருந்தனர்..!!

‘இவர்களா..?? இவர்கள்தான் இந்த மாணிக்சந்த் பெற்றெடுத்த பேட்டாக்களா..??’ அசோக் திருதிருவென விழித்தான்..!!

இவ்வளவு நேரமும் அசோக் அவர்களைப் பற்றி வர்ணித்ததை எல்லாம்.. அவர்களும் கேட்டுக் கொண்டுதான் இருந்திருப்பார்கள் போல.. நடந்துவரும்போதே அசோக்கை உர்ரென முறைத்துக்கொண்டேதான் வந்தார்கள்..!! அசோக் அவர்களைப் பார்த்து ‘ஹிஹி..’ என்று அசட்டுத்தனமாய் இளிக்க.. அவர்கள் அப்பாவை நெருங்கி ஆளுக்கொரு பக்கமாய் அமர்ந்துகொண்டார்கள்..!!

“இவுருதான் நம்ப டைரக்ட்டர்.. பேரு அசோக்..!!” மகன்களுக்கு அசோக்கை அறிமுகப்படுத்தினார் மாணிக்சந்த்.

“இது நம்ப பெருசு பையன் பிரேம்சந்த்.. இது நம்ப சிறுசு பையன் தீப் சந்த்.. !! பிரேம்சந்த்தான் நம்ப பட்துகூ எக்ஸிக்யூட்டிவ் ப்ரொட்யூசர்..!!” அசோக்கிற்கும் அவர்களை அறிமுகம் செய்துவைத்தார்.

“ம்ம்.. ஸ்டோரியை கண்டின்யூ பண்ணுங்கோ..!!” கடுப்புடனே அசோக்கிடம் சொன்னான் பிரேம்சந்த்.

அசோக் சொன்ன கதை.. மாணிக்சந்த்திற்கும் அவரது மகன்கள்சந்த்திற்கும் மிகவுமே பிடித்துப் போனது.. அந்தக்கதையை படமாக்கலாம் என்று மகிழ்வுடன் முடிவெடுத்தார்கள்..!! அன்றே அக்ரிமன்ட்டும் போட்டு.. அட்வான்ஸ் செக்கையும் அசோக்கின் கையில் திணித்தார்கள்..!! நடிகர், நடிகைகளை தாங்களே முடிவு செய்வதாக சொன்னவர்கள்.. டெக்னிகல் டீமை மட்டும் அசோக்கே தேர்ந்தெடுத்துக்கொள்ள அனுமதித்தார்கள்..!! அவனுடைய டெக்னிகல் டீமில் முதல் ஆளாய் சேர்ந்தவன் கிஷோர்தான்.. தனி ஒளிப்பதிவாளனாய்..!!

அந்தவாரத்தின் இறுதியிலே ஒருநாள்.. படத்திற்கான டைட்டில் குறிப்பிடப்படாமலே.. வடபழனி வாஹினி ஸ்டுடியோவில் படத்திற்கு பூஜையும் போடப்பட்டது..!! அத்தனை நாளாய் வீட்டிற்கு டிமிக்கி கொடுத்த அசோக்காலும், கிஷோராலும்.. அதன்பிறகும் தப்பிக்க இயலவில்லை..!! ‘அதான் இப்போ ரெண்டு பேர் நெனச்சதும் நடந்துடுசுல.. அடுத்த முகூர்த்தத்துலயே கல்யாணத்தை வச்சிர வேண்டியதுதான்..!!’ என்று ஆளாளுக்கு பேசி.. அவர்கள் இருவரையும் கோழியை அமுக்குவதுபோல அமுக்கினர்..!!

இயக்குனராக ஒப்பந்தமான இரண்டே வாரங்களில்.. வளசரவாக்கத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில்.. மங்கள வாத்திய மேளம் முழங்கியது.. ஒரே மேடையில் இரு ஜோடிகளுக்கு கல்யாணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது..!! அசோக், கிஷோரின் குடும்பத்தினர் தவிர்த்து.. அசோக்கின் நண்பர்கள், மும்தாஜ், ஸ்ரீனிவாச பிரசாத், மலரவன், மாணிக்சந்த், மோகன்ராஜ் என.. அனைவருமே திருமணத்திற்கு வருகை தந்திருந்தனர்.. அடுத்தடுத்து முன்வரிசையில் அமர்ந்திருந்தனர்..!!

“கெட்டி மேளம்.. கெட்டி மேளம்..!!”

ஐயர் கத்தினார்.. மங்கள மேளம் ஒலித்தது..!! மலர்மாலைகள் தாங்கிய தோள்களுடன்.. அசோக் மீராவின் கழுத்தில் தாலி கட்டினான்.. கிஷோர் சங்கீதாவின் கழுத்தில் மாங்கல்யம் பூட்டினான்..!! வந்திருந்தவர்களின் அட்சதை ஆசீர்வாதத்தில்.. மணமேடையில் பூமழை பொழிந்தது..!!

—————————–XXXXXXXXXXXXX—————————–
அசோக்கிற்கும் மீராவுக்கும் திருமணம் முடிந்த மூன்றாம் நாள்..

‘கீழை நாடுகளின் வெனிஸ் நகரம்’ என்று அழைக்கப்படுகிற.. கேரளா மாநிலத்தை சேர்ந்த எழில்மிகு ஆலப்புழா..!! சூரியனின் ஆட்சிக்காலம் முடிந்துபோய்.. சந்திரன் தன் ஆளுமையை இவ்வுலகில் செலுத்த ஆரம்பித்திருந்த சமயம்..!! இந்தியாவின் மிக நீளமான ஏரியான வெம்பநாடு ஏரி.. இப்போது இருளில் நனைந்த நீரினால் நிரம்பியிருந்தது..!!

கருநீல நிறத்தில் தழும்பிய காயல் நீரில்.. வெண்ணிலாவின் வெளிச்சம் சிதறி தகதகத்தது..!! கரி அப்பிக்கொண்டு ஏரியின் ஓரத்தில் அணிவகுத்திருந்த தென்னை மரங்கள்.. காற்றுக்கு தங்களது கிளைக்கைகளை அசைத்துக் கொண்டிருந்தன..!! காற்றில் சம்பா மலர்களின் வாசனை..!! ஏரியிலிருந்து வெளிக்கிளம்பி மொட்டையாக நின்ற கட்டை மரமொன்றில்.. ஏறியமர்ந்து தலைசிலுப்பிய கரிச்சான் குருவியொன்று.. ‘கீச்.. கீச்.. கீச்..’ என்று ஒலி கிளப்பியது..!!

இருண்டுபோன ஏரியின் மையத்தில்.. பளிச்சென்ற வெளிச்சத்துடன் மிதந்து கொண்டிருந்தது அந்த படகுவீடு..!! கெட்டு வள்ளம் என்று அழைக்கப்படுகிற நீளமான, அகலமான மரப்படகு.. அதன்மீது மூங்கிலாலும், பனை ஓலையாலும் கூரை வேயப்பட்ட அழகுவீடு..!! உட்புறம் ஒளிர்ந்த விளக்குகள் அந்த படகுவீட்டை பிரகாசமாக்கியிருந்தன.. வெளிப்புறம் கசிந்த மஞ்சள் வெளிச்சம் அப்பகுதியின் இருள் போக்க உதவியிருந்தது..!! தண்ணீருக்குள் தங்கத்தேர் என சுருக்கமாக அவ்வீட்டை வர்ணிக்கலாம்..!!

படகின் முற்பகுதி.. பக்கவாட்டில் தடுப்பற்று விடப்பட்டிருந்தது.. பிரம்பு நாற்காலிகள், மர மேஜைகளுடன் உணவு உண்ணுவதற்கான வசதியுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது..!! கூரையில் தொங்கிய குழல் விளக்குகள்.. படகு விளிம்பை ஒட்டிக்கிடந்த வெல்வெட் சோபாக்கள்..!! அதைக்கடந்து.. எதிர்ப்படும் மூங்கில்க்கதவை திறந்தால்.. வீட்டுக்குள் பிரவேசிக்கலாம்..!! உள்ளே.. பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு அறைகள்.. நடுவே நீளமாய் சிவப்புக் கம்பள விரிப்பு..!!

இடதுபுறம் இருக்கிற அறைக்குள் நுழைந்தோமானால்..

அறையின் மையத்தில் கிடந்த அந்த மெத்தையில்.. அசமஞ்சமான ஒரு வெளிச்சத்தில்.. அரைநிர்வாண நிலையில்.. அமாவாசையிரவு பாம்புகளாய்.. இரண்டு மனித உடல்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து நெளிந்து கொண்டிருந்தன..!! அவர்களுக்கு அருகே சென்று உற்றுப்பார்த்தோமானால்..

ஸாரி.. தப்பான ரூமுக்குள்ள வந்துட்டோம் போல இருக்கு.. இது கிஷோரும், சங்கீதாவும்..!! அப்படியே ட்ராலி பேக்வேர்ட் போங்கப்பா..!! ஹிஹி..!!

அறைக்கு வெளியே வந்து.. அப்படியே ஒரு யூ டர்ன் அடித்து.. எதிரே தெரிகிற கதவை திறந்து.. சப்தமிடாமல் உள்ளே நுழைந்தோமானால்..

– தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments