அன்புள்ள ராட்சசி – பகுதி 21

“எங்க போறோம் இப்போ..??”

“ஏதாவது பாருக்கு போ..!!”

மீரா கூலாக சொல்ல, அசோக் குப்பென்று ஷாக் ஆனான். சர்ர்ரக்கென ப்ரேக் அடித்து பைக்கை நிறுத்தினான்.

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

“என்னது..????” என்று முகம் அஷ்டகோணலாகி போனவனாய் அவளிடம் திரும்பி கேட்டான்.

“ப்ச்.. காதும் போச்சா..?? ஏதாவது பாருக்கு போன்னு சொன்னேன்..!!”

“ஏ..ஏன்.. எ..எதுக்கு இப்போ.. திடீர்னு..??”

“எனக்கு மனசு சரியில்ல.. தண்ணியடிக்கனும் போல இருக்கு.. அதான்..!!”

“எ..என்ன மீரா நீ..?? ப..பசங்கதான் இப்படிலாம்.. மனசு சரியில்லன்னு..”

“ஏன்.. பசங்க மட்டுந்தான் குடிக்கனுமா..?? பொண்ணுக குடிக்க கூடாதா..?? போ..!!”

“அ..அதுக்காக இல்ல.. இப்படி.. எ..எங்கிட்ட வந்து..”

“உன்கிட்ட வந்து சொல்லாம வேற யார்ட்ட போய் சொல்றது..?? குடிகாரப்பயதான நீ..?? சென்னைல இருக்குற பார்லாம் ஒன்னுவிடாம போய் குடிச்சிருக்கேல..?? அதுல ஏதாவது ஒரு டீசண்ட் பாருக்கு என்னை கூட்டிட்டு போ..!!”

“இ..இல்ல மீரா.. நான் என்ன சொல்ல வர்றேன்னா.. எ..எனக்கென்னவோ இது..”

“ஷ்ஷ்ஷ்…!!!! இப்போ நீயா கூட்டிட்டு போறியா.. இல்லனா.. நானா எங்கயாவாது போய் குடிச்சுக்கட்டுமா..??”

மீரா சீற்றமாக சொல்ல, அசோக் மனதுக்குள் ‘சர்தான்..!!’ என்று நினைத்துக் கொண்டான். ஹெல்மட் கண்ணாடியை இறக்கிவிட்டுக்கொண்டு, வண்டியை கிளப்பினான். அப்புறம் பார் சென்று சேரும் வரை இருவரும் அதிகமாக பேசிக்கொள்ளவில்லை.

“காசு வச்சிருக்கியா..??” கேட்டாள் மீரா.

“கார்ட் வச்சிருக்கேன்..!!” சொன்னான் அசோக்.

“ஏற்கனவே ட்ரிங்ஸ்லாம் சாப்ட்ருக்கியா..??” கேட்டான் அசோக்.

“ம்ம்.. சாப்ட்ருக்கேன்.. சாப்ட்ருக்கேன்..!!” சொன்னாள் மீரா.

அவ்வளவேதான்..!!

கத்திப்பாரா ஜங்கஷனில் இடதுபுறம் திரும்பி.. சற்றே வேகமெடுத்து சர்தார் படேல் சாலையில் திரும்பியதுமே.. வெள்ளை வெளேர் என்று.. உயரமாகவும், கம்பீரமாகவும் காட்சியளித்தது.. அந்த மூன்று நட்சத்திர ஹோட்டல்..!! அசோக் பைக்கை உள்ளே செலுத்தி பார்க் செய்தான்..!! இருவரும் இறங்கி.. பக்கவாட்டில் இருந்த பார் பகுதிக்கு சென்றனர்..!! நண்பர்களுடன் குடிக்கிற வாய்ப்பு மிஸ் ஆனதில்.. அசோக்கின் மனதோரமாக ஒரு ஏக்கம் இருந்தது.. பிறகு மீரா திரும்ப வந்ததில்.. அந்த ஏக்கம் எப்போதோ காணாமல் போயிருந்தது.. இப்போது அவளுடன் சேர்ந்து மது அருந்தப் போவது.. அவனுடைய மனதில் ஒரு புதுவித கிளர்ச்சியை உண்டு பண்ணியிருந்தது.. மிகவும் சந்தோஷமாகவே காணப்பட்டான்..!! ஆனால்.. மீராதான் முகத்தை ஏனோ உர்ரென்று வைத்துக்கொண்டு அவனுடன் நடந்தாள்..!!

மஞ்சள் நிற வெளிச்சத்தில் குளித்து.. பளிச்சென்று இருந்தது அந்த பார்..!! சிவப்பு நிற வெல்வெட் நாற்காலிகள்.. தேக்கு மர மேஜைகள்..!! அங்கொன்றும் இங்கொன்றுமாய்.. குடிக்க வந்திருந்த குரூப்கள்..!! இளையராஜாவின் இன்ஸ்ட்ருமென்டல் இசை.. இதமாய் கசிந்து.. காற்றை இனிமையாய் மாற்றிக் கொண்டிருந்தது..!!

“என்ன சாப்பிடுற..??”

“சம்திங் ஸ்ட்ராங்.. வெரி ஸ்ட்ராங்..!! எது பயங்கர ஸ்ட்ராங்கா இருக்குமோ அதை ஆர்டர் பண்ணு..!!”

“பயங்கர ஸ்ட்ராங்னா பட்டை சாராயம்தான்..!!”

“இங்க கெடைக்குமா..??” மீரா சளைக்காமல் கேட்க, அசோக் அரண்டு போனான்.

“ஆத்தாடீஈஈ..!! ஒரு முடிவுலதான் இருக்குற போல இருக்கு..?? அ..அதுலாம் இங்க கெடைக்காது.. நான் வேணா உனக்கு ஏதாவது ஃபாரீன் விஸ்கி ஆர்டர் பண்றேன்.. ஜஸ்ட்.. ஸ்லீக் அண்ட் ஸ்மூத்..!!”

“ஹ்ம்ம்.. ஓகே.. ஸ்வீட்..!!”

மீராவும் ஒப்புக்கொள்ள, அசோக் ஜானிவாக்கர் விஸ்கி இரண்டு லார்ஜ் ஆர்டர் செய்தான். தொட்டுக்கொள்ள வெஜ் ஷீக் கபாப்..!! பத்தே நிமிடத்தில் ஆர்டர் செய்த வகையாறாக்கள் வந்து சேர்ந்தன. அசோக்கே மீராவுக்கும் சேர்த்து மிக்ஸிங்செய்து.. கோப்பையை அவள் பக்கம் நகர்த்தினான்..!!

“சியர்ஸ்..!!”

சொல்லிவிட்டு.. மீராவுடன் ஜென்டிலாக கோப்பை இடித்துவிட்டு.. விஸ்கியை உதட்டுக்கு கொண்டு சென்றான்..!! கண்ணாடி விளிம்பில் உதடுகள் பதித்து.. கொஞ்சமாய் உறிஞ்சி.. நாக்கின் சுவையுணர்வு மொட்டுகளுக்கு விஸ்கியின் சுவையை காட்டி.. அப்படியே மிடறு விழுங்கி.. மெல்ல தொண்டைக்குள் அனுப்பி.. குரல்வளை வழியாக சுருசுருவென அனல் பரப்பிக்கொண்டு.. அந்த திரவம் அடி வயிறு நோக்கி இறங்குவதை.. இமைகள் செருக அசோக் அனுபவித்து ரசித்துக் கொண்டிருக்கும்போதே..

“டமார்..!!” என்று காதை அறைந்தது அந்த சப்தம்.

அசோக் பதறிப்போய் இமைகளை பிரித்தான். மீரா கண்ணாடி கோப்பையை டேபிளில் வைத்த சப்தம்தான் அது..!! கோப்பையில் தளும்ப தளும்ப இருந்த மொத்த விஸ்கியையும்.. ஒரே கல்ப்பில் கப்பென்று அடித்திருந்தாள்.. அடித்து முடித்து காலி கோப்பையைத்தான் அந்த மாதிரி “டமார்..!!” என்று டேபிளில் வைத்திருந்தாள்..!! இப்போது கண்களை இறுக்க மூடிக்கொண்டு.. முகத்தை ஒருமாதிரி சுளித்தவாறு..

“க்க்ஹ்ஹ்ஹாஹாஹ்..!!!!” என்று கனைத்தாள்.

கனைத்தவள், சிறிது நேரம் அப்படியே கண்களை மூடிக்கொண்டு, தலையை கவிழ்த்தவாறு அமர்ந்திருந்தாள். வாயை மட்டும் அவ்வப்போது திறந்து, ‘ஹா.. ஷ்ஷ்ஷ்.. ஹா..’ என்று காற்று வெளிப்படுத்தினாள். அசோக் அவளையே ஒருமாதிரி மிரட்சியாக பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு சற்றே தயக்கத்துடன்..

“மீ..மீரா.. மீரா.. என்னம்மா ஆச்சு..??” என்றான்.

மீரா இப்போது தலையை சிலுப்பிக்கொண்டு எழுந்து அமர்ந்தாள். விழிகளை படக்கென திறந்தாள். அசோக்கை கண்டு கொள்ளாமல், பின்பக்கமாய் திரும்பி.. பேரரை பார்த்து..

“ரிப்பீட்..!!” என்றாள் காலி கோப்பையை ஒற்றை விரலால் தட்டிக் காட்டியவாறே.

“மீ..மீரா எதுக்கு இப்போ..” அவளை தடுக்க முயன்ற அசோக்கை,

“ஷ்ஷ்ஷ்ஷ்..!!” என்று உதட்டில் விரல் வைத்து அடக்கினாள்.

அசோக் ‘சர்தான்..!!’ என்றான் மனதுக்குள். பேரர் மீண்டும் ஒரு லார்ஜ் கொண்டு வந்து டேபிளில் வைத்தான். அசோக் தயங்கி தயங்கி மீண்டும் மிக்ஸிங் கலந்தான். மீரா கோப்பையை எடுத்து மீண்டும் ஒரே கல்ப்பில் அடித்தாள். மீண்டும் டேபிளோடு ஒரு ‘டமார்’.. மீண்டும் கனைப்பாக ஒரு ‘க்க்ஹ்ஹ்ஹாஹாஹ்’.. மீண்டும் கண்கள் மூடி சிறிது நேர நித்திரை..!!

அசோக்கிற்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.. தலை கவிழ்ந்து கிடந்தவளையே பரிதாபமாக ஒரு பார்வை பார்த்தான்..!!

“மீரா.. ரொம்ப தாகமா இருந்தா வாட்டர் வேணா வயிறு முட்ட குடிச்சுக்கோ.. இப்படி விஸ்கிலாம் தாகத்துக்கு குடிக்கிற மாதிரி குடிக்க கூடாது..!!”

“வேற எப்படி குடிக்கணும்..??” மீரா தலையை நிமிர்த்தி கேட்டாள்.

“இந்தா.. என்னை மாதிரி.. லைட்டா.. ஒவ்வொரு சிப்பா..”

“ப்ச்.. அதுலாம் உன்னை மாதிரி கொய்ந்தைங்க குடிக்கிறதுடா.. நமக்குலாம்..” சொன்னதை முடிக்காமல் அவள் இழுக்க,

“ம்ம்.. உனக்குலாம்..??” அசோக் கேள்வியாக அவளை பார்த்தான்.

மீரா அசோக்குக்கு பதில் சொல்லவில்லை. கண்களை இடுக்கி அசோக்கின் முகத்தையே கூர்மையாக பார்த்தாள். பிறகு தலையை திருப்பாமலே.. அவனது முகத்தை பார்த்த பார்வையை நகர்த்தாமலே..

“ரிப்பீட்..!!!!” என்று பெரிய குரலில் கத்தி, பேரருக்கு ஆர்டர் கொடுத்தாள்.

“ஹேய்.. என்ன நீ..?? பத்து ரூபாய்க்கு நாலுன்னு பானிபூரி மாதிரி.. வாங்கி கபால் கபால்னு உள்ள விட்டுட்டு இருக்குற.. ஃபாரீன் சரக்குமா இது.. என்ன ரேட் தெரியுமா.?? கொஞ்சமாவது அதுக்குண்டான மரியாதையை குடு..!!”

“ஏய்.. எல்லாம் எனக்கு தெரியும்.. மூட்றா..!!” மீரா அலட்சியமாக சொல்ல, அசோக் நெற்றியை பிசைந்து கொண்டான்.

“ஏன் மீரா.. நெ..நெஜமாவே.. நீ முன்னப்பின்ன குடிச்சிருக்கியா.. இல்ல..”

“ஏன் கேக்குற..??”

“எ..எனக்கு என்னவோ சந்தேகமா இருக்கு..!!”

“சந்தேகந்தான..?? தீத்துட்டா போச்சு..!! டோன்ட் வொர்ரி.. ஐ வில் கிளியர் ஆ….ல் யுவர் டவுட்ஸ்..!! நவ்.. ரைட் நவ்..!!”

மீராவுக்கு நன்றாக போதை ஏறிவிட்டது என்பதை அசோக்கால் இப்போது புரிந்து கொள்ள முடிந்தது. குழறுகிற வாயுடன், அவள் ஆங்கிலத்துக்கு தாவியதிலேயே அதனை அறிந்து கொள்ள முடிந்தது. மீராவும் அதை உறுதி செய்தாள். மூன்றாவது லார்ஜை பேரர் கொண்டு வர.. ‘உன் டவுட்டை இப்போ கிளியர் பண்றேன் பார்..’ என்றவள், மிக்ஸிங் கலக்காத விஸ்கியை எடுத்து, அப்படியே ராவாக வாய்க்குள் ஊற்றினாள்..!! அசோக் ‘ஆ’வென்று வாயை பிளந்து பதறிப் போனான்..!!

“ஐயோ.. என்ன பண்ற நீ..?? அப்படியே ராவா..”

“ஏ..ஏன்.. குடிச்சா என்ன..??” அடர்த்தியான ஆல்கஹாலுக்கு முகத்தை சுளித்தவாறே மீரா கேட்டாள்.

“ஹாட்டா இருக்கும்..!!”

“ஹாஹா.. இந்த மிர்ச்சிக்கே ஹாட்டா..???”

என்று கெத்தாக கேட்டவள்.. தட்டில் அலங்காரத்துக்காக வைக்கப்பட்டிருந்த.. அந்த தடித்த முழுநீள பச்சை மிளகாயை எடுத்து.. அப்படியே கடித்து நறநறவென மெள்ள ஆரம்பித்தாள்..!! அசோக் டென்ஷனாகிப் போனான்.. ‘யோசனை இல்லாமல் இவளை இங்கே அழைத்து வந்துவிட்டோமோ’ என்று முதன்முறையாக அவனுக்கு ஒரு கிலி கிளம்பியது..!!

“ஹேய்.. உனக்கு என்ன லூஸா..?? விஸ்கியை ராவா குடிச்ச.. இப்போ பச்சை மிளகாயை அப்படியே..”

“ஹ்ஹ.. இதுலாம் என்னை ஒன்னும் செய்யாது மச்சி.. ஐம் மிர்ச்சி மச்சி.. மிர்ச்சி..!!”

“அறிவில்லாம பேசாத..!! இந்தா.. இந்த தண்ணியை கொஞ்சம் குடி.. வயிறை ஏதாவது பண்ண போகுது..!!”

“ம்ஹூம்.. எனக்கு இந்த தண்ணி வேணாம்..!! பேரர்..”

“அப்படியே அறைஞ்சிடுவேன் மீரா..!!”

“ஹ்ஹ.. நீ என்னை அறைய போறியா..?? அவ்ளோ தைரியமா உனக்கு..??”

“ஆமாம்.. இப்போ இதை குடிக்கல.. அதான் நடக்கப் போகுது..!! குடி.. குடின்றேன்ல..??”

அசோக் மீராவின் வாயைப் பிடித்து வலுக்கட்டாயமாக அவளுக்கு குளிர்ந்த நீர் புகட்டினான்.

“கொஞ்சமாவது அறிவு இருக்கா உனக்கு..?? இப்படிலாம் சாப்பிட்டா குடல் வெந்து போயிடும்..!!”

அவளை திட்டிக்கொண்டே நீர் புகட்டினான். மீராவும் ஒரு க்ளாஸ் நிறைய இருந்த தண்ணீர் மொத்தத்தையும் மடக் மடக்கென குடித்துவிட்டாள். குடித்து முடித்ததும், ‘ஏவ்..’ என்று எதுக்களிப்பை வெளிப்படுத்தியவள், பிறகு உதடுகளை சப்பிக்கொண்டே..

“ச்சோ.. ச்ச்வீட்..!!” என்றாள் திடீரென.

அவள் எதை சொல்கிறாள் என்று ஒருகணம் குழம்பிய அசோக், ஒருவேளை தண்ணீரில் சக்கரை விழுந்துவிட்டதோ என காலி க்ளாஸை பார்க்க, மீரா இப்போது ஒரு கெக்கலிப்புடன் சொன்னாள்.

“ஹ்ஹ.. தண்ணிய சொல்லலடா லூசுப்பயலே.. உன்னைய சொன்னேன்..!!”

சொல்லிவிட்டு அசோக்கை பார்த்து கண்ணடித்தாள். அவனுக்கோ இப்போது உடனடியாய் ஒரு வெட்கம். உதட்டில் அழகான புனனகையுடன்,

“ஆமாம்.. அடிக்கடி இது ஒன்னை சொல்லிடு.. ‘ச்சோ ச்ச்வீட், ச்சோ ச்ச்வீட்’ன்னு..!!” என்றான்.

“ஹையோ.. வெக்கத்தை பாரு.. என் ஹனிபனிக்கு..!!”

இளிப்புடன் சொன்ன மீரா, படக்கென சேரில் இருந்து எழுந்தாள். ஹஸ்கியான செக்ஸியான குரலில் அவள் பாட்டுக்கு பாட ஆரம்பித்தாள்.

“யூ’ஆர் மை பம்கின்.. பம்கின்.. ஹெலோ ஹனிபனி..!! ஐ’ம் யுர் டம்ளிங்.. டம்ளிங்.. ஹெலோ ஹனிபனி..!! ஃபீலிங் சம்திங்.. சம்திங்.. ஹெலோ ஹனிபனி.. ஹனிபனி.. டோகோ டோகோ..!!”

இடுப்பில் ஒரு கையும், தலையில் ஒரு கையுமென.. மாறி மாறி வைத்துக்கொண்டு.. தனது பின்புறத்தை இப்படியும் அப்படியுமாய் அழகாக அசைத்து அசைத்து.. இமைகளை படக் படக்கென வெட்டியவாறே.. அசோக்கை பார்த்து பாடிக்கொண்டே அவள் ஆட.. இப்போது பாரில் இருந்த அனைவரும் திரும்பி அவளை பார்த்தனர்.. ‘உய்ய்ய்..’ என்று கத்தியவாறே உற்சாகமாக கைதட்டினார்கள்..!! அசோக்கிற்கோ வெட்கம் பிடுங்கித் தின்றது..!!

“ஹேய்.. என்ன பண்ற நீ..?? எல்லாரும் பாக்குறாங்க.. உக்காரு மீரா.. ப்ளீஸ்.. உக்காரு..!!”

அவளுடைய தோள்களை பற்றி அழுத்தி, அரும்பாடு பட்டு அவளை அமரவைக்க வேண்டியதிருந்தது அசோக்குக்கு..!!

அப்புறம் சிறிது நேரம் மீரா அடித்த கூத்துக்கும், செய்த ரகளைக்கும் அளவே இல்லை. அசோக்தான் நொந்து போனான். அவளை கண்ட்ரோல் செய்வதே கடினமான காரியமாக இருந்தது. ஏற்றிய கொஞ்ச நஞ்ச போதையும் இறங்கிப்போனது. நான்காவது லார்ஜ் கொண்டு வந்து ஊற்றிய பேரர்,

“என்ஜாய் யுவர் டிரிங் மேடம்..!!” என்ற மாமூலான டயலாக்கை உதிர்க்க, மீரா

“ரிப்பீட்..!!” என்றாள். இன்னொரு லார்ஜ் கேட்கிறாளோ என்று அந்த ஆள் குழம்ப,

“இல்ல.. இப்போ நீங்க ‘என்ஜாய் யுவர் டிரிங்’னு ஸ்டைலா சிச்சுக்கிட்டே சொன்னீங்கள்ல.. அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. இட்ஸ் ச்சோ.. ச்ச்வீட்..!! ரிப்பீட் ப்ளீஸ்..!! இன்னொரு மொறை சொல்லுங்க..!!” என்று மீரா இளித்தாள். அந்த பேரர் ஓரிரு வினாடிகள் திருதிருவென விழித்தான். அப்புறம்..

“எ..என்ஜாய் யுவர் டிரிங் மேடம்..!!” என்று முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு சொன்னான்.

“வாவ்… ச்சோ.. ச்ச்வீட்..!! இன்னொரு மொறை இன்னொரு மொறை.. ப்ளீஸ் ப்ளீஸ்.. ரிப்பீட்..!!”

அந்த ஆள் இப்போது அசோக்கை பரிதாபமாக பார்த்தான். ‘எப்படியாவது இந்த இம்சைட்ட இருந்து என்னை எஸ்கேப் பண்ணி வுடு ராசா..’ என்பது போல இருந்தது அவன் பார்வை..!!

“ஹேய்.. விடு மீரா அவரை..!! ஸார்.. நீங்க போங்க ஸார்..!!” என்று அசோக்தான் அந்த பேரரை காப்பாற்றினான்.

ஐந்தாவது லார்ஜ் வந்தபோது..

“ஜானிப்பயல சும்மா சொல்லக்கூடாது.. ஜம்முனு இருக்குறான்..!!” என்று திடீரென சொல்லி, அசோக்கை குழம்ப வைத்தாள்.

“யாரு ஜானிப்பய..??”

“இதோ இவன்தான்..!!” விஸ்கியை தட்டிக்காட்டிய மீரா,

“வாக்கர்னு பேரை வச்சுக்கிட்டு.. உள்ளபோய் என்னமா தடதடன்னு ஓடுறான்..!!” கருவிழிகளை சுழற்றிக்கொண்டே சொல்ல,

“ஷ்ஷ்.. ப்பா.. இப்போவே கண்ணை கட்டுதே..!!” சலிப்பானான் அசோக்.

விஸ்கியை உள்ளே ஊற்றிவிட்டு.. கடித்துக்கொள்ள ஷீக் கபாபை கையில் எடுத்தவள்.. வாயென்று நினைத்து மூக்கில் திணித்துக் கொண்டாள்..!! அசோக் பதறிப் போனான்..!!

“ஹேய்.. மூக்கு அது..!!”

“ஓ.. மூக்கா இது..?? அப்போ வாய் எங்க..?? வேர் இஸ் மை வாய்.. வேர் இஸ் மை வாய்..??”

என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டவள்.. இடது கையால் தன் முகத்தை தடவி.. வாயை கண்டுபிடித்து.. இரண்டு விரல்களால் வாயை திறந்து.. மூடி விடாமல் பிடித்துக்கொண்டு.. வலது கையிலிருந்த ஷீக் கபாபை வாய்க்குள் லபக்கென்று போட்டாள்..!! போட்டுவிட்டு..

“எப்பூடி..??” என்றாள் பெருமையாக.

“கிழிஞ்சது..!!” தலையில் அடித்துக்கொண்டான் அசோக்.

ஆறாவது லார்ஜ் குடிக்கும்போது வேறொரு பிரச்சினை..!! சற்று தூரத்தில் அமர்ந்து குடித்துக்கொண்டிருந்த நான்கு கல்லூரி மாணவர்களில் ஒருவன்.. எதேச்சையாக இவளை திரும்பி பார்த்துவிட்டான் போலிருக்கிறது.. மீரா கொதித்து போய் விருட்டென எழுந்தாள்..!!

“ஒய்.. என்னடா இங்க லுக்கு..?? இங்க என்ன படமா காட்றாங்க..??” என்று காலி க்ளாஸை கையில் எடுத்தாள்.

அந்தப் பையன் மிரண்டு போய் அந்தப்பக்கம் திரும்பிக் கொண்டான். மீராவுடைய செய்கையில் அசோக்கும் அதிர்ந்து போயிருக்க, பேரர் அவசரமாக இவர்களை நோக்கி ஓடி வந்தான்.

“ஸார்.. கொஞ்சம் கன்ட்ரோல் பண்ணுங்க ஸார்.. இது டீசன்டான பார்.. ரொம்ப இன்டீசண்டா போறாங்க..!!”

“ஹேய்.. உக்காரு மீரா.. சொல்றேன்ல.. உக்காரு..!!” மீராவை அதட்டிய அசோக்,

“ஸாரி பாஸ்.. நான் பாத்துக்குறேன்.. நீங்க போங்க..!! நான் பாத்துக்குறேன் பாஸ்.. இனிமே இப்படி நடக்காது..!!”

பேரரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தான். அப்புறம் எழுந்து எதிரே இருந்த மீராவுக்கு அருகில் சென்று அமர்ந்து கொண்டான். அவளுடைய புஜத்தை இறுகப் பற்றியவன், சற்றே எரிச்சலான குரலில் கேட்டான்.

“எ..என்ன மீரா இது.. எல்லாரும் நம்மை பத்தி என்ன நெனைப்பாங்க..?? ச்ச..!!”

“என்ன வேணா நெனச்சுக்கட்டும்.. எனக்கு கவலை இல்ல..!!”

“ப்ச்.. என்னாச்சு உனக்கு.. ஏன் இப்படிலாம் பண்ற..??” அசோக் இப்போது சலிப்பாக கேட்க,

“எனக்கு மனசே சரி இல்ல அசோக்.. அதான்..!!” மீரா பாவமாக சொன்னாள்.

“அதுக்காக..??”

“யாரையாவது புடிச்சு சப்பு சப்புன்னு அறையணும் போல இருக்கு..!!”

“ஹ்ம்ம்.. அவ்வளவுதான..?? சரி.. என்னை அடி.. எவ்ளோ வேணா என்னை அடிச்சுக்கோ.. உன் கோவத்தை என் மேல காட்டு..!! ம்ம்.. கமான்..!!” அசோக் சீரியஸாக சொல்ல, மீரா இப்போது சிரித்தாள்.

“ஹ்ஹ.. உன்னை எதுக்கு அடிக்கணும்..?? நீ… என் செல்…ல ஹனிபனி..!!” என்று கண்சிமிட்டியவள், உடனே அந்த கல்லூரி பையனை நோக்கி கைநீட்டி..

“எனக்கு அவனைத்தான் அடிக்கனும்.. அவன் ஃபேஸ்-கட்டே எனக்கு சுத்தமா பிடிக்கல..!! ப்ளீஸ் அசோக்.. ரெண்டே ரெண்டு அறை.. அவனை போய் அறைஞ்சுட்டு வந்துர்றேன்.. ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்..!!” என்று கெஞ்சலாக கேட்டவாறே எழ முயல, அசோக் அவளை பிடித்து அமுக்கினான்.

“என்ன வெளையாடுறியா.. உக்காரு மீரா..!!”

“ப்ளீஸ் அசோக்..!!”

“ப்ச்.. சொல்றேன்ல..?? வேணுன்னா என்னை அறைஞ்சுக்கோ..!!”

“உன்னை அறைய மாட்டேன் போ.. யு ஆர் எ குட்பாய்..!!”

“ஹாஹா.. யாரு.. நானா..??” அசோக் சிரிப்புடன் கேட்டான்.

“யெஸ்ஸ்ஸ்..!! அசோக் இஸ் எ குட்பாய்..!! மீரா இஸ் எ பேட் கேர்ள்.. வெரி வெரி பேட் கேர்ள்..!!!” மீரா திடீரென அவ்வாறு சீரியஸான குரலில் சொல்ல, அசோக் அப்படியே உருகிப் போனான்.

“ஹேய்.. ஏன் இப்படிலாம் சொல்ற..??”

“யெஸ்.. இட்ஸ் ட்ரூ..!!”

“ப்ச்.. அதுலாம் ஒன்னுல்ல.. மீரா ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு.. எனக்கு நல்லா தெரியும்..!!”

மீராவின் கலைந்திருந்த கூந்தல் கற்றையை சரி செய்தவாறே, அசோக் காதலாக சொன்னான். மீரா இப்போது எதுவும் பேசாமல், அசோக்கையே அமைதியாக பார்த்தாள். இமைகளை அசைக்காமல்.. ஒருவித சலனமற்ற பார்வை..!! பிறகு..

“உனக்கு நான் ரொம்ப கஷ்டம் கொடுத்திட்டேன்ல..?? ஸாரி..!!” என்றாள் இரக்கமாக.

“ஹேய்.. மீரா.. எ..என்ன இது..??”

“தப்பான நம்பர் குடுத்து பிரச்னைல மாட்டிவிட்டு.. டிக்கெட் விக்க சொல்லி தெருதெருவா அலையவிட்டு.. கடலை கூடைலாம் உன் தலைல தூக்க வச்சு..!! எல்லாம் உனக்கு தேவை இல்லாத கஷ்டம்ல.. ஸாரிடா.. ஸாரி..!!”

“ப்ச்.. என்ன மீரா நீ..?? உன்னை நான் எவ்வளவு லவ் பண்றேன் தெரியுமா..?? உனக்காக இது கூட பண்ண மாட்டேனா..?? அதில்லாம.. அர்பனேஜ்ல அந்த கொழந்தைங்க.. ட்ரெயின்ல அந்த தாத்தா.. அந்த ப்ரக்னன்ட் லேடி.. எல்லாரும் அவங்க மனசார எனக்கு தேங்க்ஸ் சொன்னப்போ.. எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருந்தது தெரியுமா..?? அந்த மாதிரி ஒரு சந்தோஷத்தை நான் அனுபவிச்சதே இல்ல.. அதெல்லாம் உன்னாலதான..?? இ..இன்னும் சொல்லப் போனா.. உன்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சதே.. நீ இந்த மாதிரி பண்ற இம்சைதான்.. தெரியுமா..?? உன்கிட்ட சொன்னதில்ல.. பட்.. ஐ ஜஸ்ட் லவ் தட்..!!” மீராவுக்கு இதமளிக்குமாறு அசோக் அவ்வாறு சொல்ல, அவள் இப்போது பட்டென முகம் மலர்ந்து போனாள்.

“ரியல்லி..????” என்றாள் கண்களில் ஒரு மின்னலுடன்.

“யெஸ்..!!!”

“வாவ்..!! ஐ’ம் ஸோ ஹேப்பி நவ்..!!!” மீராவின் குழந்தைத்தனமான குதுகலம் அசோக்கிற்கு சிரிப்பை வரவழைத்தது.

“ஹாஹா..!!”

“ஓகே.. இந்த சந்தோஷத்தை கொண்டாட.. எனக்கு ஒரு ஜானி ரிப்பீட் சொல்லேன்..!!”

“ப்ச்.. போதும்.. ஏற்கனவே உனக்கு ரொம்ப ஓவராயிடுச்சு..!! சாப்பிட்டுட்டு கெளம்பலாம்.. நீ வேற வீட்டுக்கு போகணும்ல..??”

“ம்ஹூம்.. வீடு வேணாம்.. நோ வீடு.. வீடு எனக்கு புடிக்கல..!!”

“என்ன வெளையாடுறியா.. வீட்டுக்கு போகலனா உன்னை தேட மாட்டாங்க..??”

“தேட மாட்டாங்க.. வீட்ல யாரும் இல்ல.. நான் மட்டுந்தான்..!!”

“ஓ.. எங்க போயிருக்காங்க..??”

“ம்ம்ம்ம்.. ஊர்ல திருவிழா..!!”

“நீ போகலையா..??”

“போனேன்.. புடிக்கலன்னு நான் மட்டும் வந்துட்டேன்..!!”

– தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments